1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : இளையராஜா மகள் மரணத்திற்கு இது தான் காரணம்..!

1

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 5 மாதங்களாக புற்றுநோய் பாதிப்பு காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.20 மணிக்கு மரணம் அடைந்தார். நாளை மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது .கல்லீரல் புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத மையத்தில் அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் காலமானார்.

இளையராஜாவின் இரு புதல்வர்களும் தந்தையின் வழியில் இசைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மகள்பவதாரணியோ பாட்டுக்கு வந்து விட்டார்.அப்பாவைப் போலவே இசைஞானம் கொண்டுள்ளவர் பவதாரணி.பாரதி படத்தில் அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாட்டுக்கு, தேசிய விருது பெற்று அப்பாவுக்கு பெருமை சேர்த்தார்.பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் இலங்கையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 

Trending News

Latest News

You May Like