இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! தமிழர்களுக்கு ஜெர்மனியில் வேலை..! மாத சம்பளம் மட்டும் 2 லட்சம்..!

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிய ஆண்/பெண் செவிலியர்கள் தேவைபடுகின்றனர். இவர்கள், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் 6 மாதம் பணி அனுபவம் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
இவர்களுக்கு B1, B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கப்பட்டு, மாத சம்பளமாக சுமார் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள், www.omcmanpowertn.gov.in என்ற இணையதளத்தில் இதற்கு பதிவு செய்ய வேண்டும். சுய விவர விண்ணப்ப படிவம், கல்வி சான்றிதழ், வெள்ளை நிற Back Ground-ல் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பணி அனுபவ சான்றிதழ் உள்ளிட்டவை தேவைப்படும்.
மேலே குறிப்பிட்ட ஆவணங்களை, omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, 15.03.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இந்த பணிக்கு, எந்தவொரு இடைத்தாரரோ, ஏஜெண்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக பஹ்டிவு செய்து கொண்டு பயணடையலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 63791 79200/044-2250586 மற்றும் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.