1. Home
  2. தமிழ்நாடு

சைத்ரா ரெட்டி காரில்...கயல் சீரியல் நடிகைக்கு நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்..!

Q

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் பிரியா பவானி ஷங்கர் நடித்து வந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தன் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார் நடிகை சைத்ரா ரெட்டி.

அதன் பின், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ தொடரில் வில்லியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் சைத்ரா. இதை தொடர்ந்து, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரின் நாயகியாக நடித்து வரும் சைத்ராவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இவர் தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு களமிறங்கவும் உள்ளார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக செய்லபட்டு வரும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதில், எனக்கு நேற்றிரவு ஒரு பயங்கரமான சம்பவம் அரங்கேறியது. எனது வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு ஒரு மணிக்கு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் போரூர் மேம்பாலத்தில் DD சோதனை நடைபெற்ற காரணத்தால் வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தன. எனது கார் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, மேலே மெட்ரோ கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு பெரிய சிமெண்ட் கலவை எனது மீது விழுந்தது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்து ஆபத்தை உணர்ந்து செய்வதறியாது திகைத்தேன். காருக்குள் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இந்த சம்பவத்தில் என்மீது எந்த தவறும் இல்லாத போது கூட, காருக்கு மிகப்பெரிய தொகையை செலவழிக்க வேண்டியுள்ளது. இங்கு மெட்ரோ கட்டுமான பணிகள் நடக்கிறது என எச்சரிக்கும் வகையில் எந்த அறிவிப்பும் அங்கு இல்லை. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதே எனக்கு பதிலாக இருசக்கர வாகன ஓட்டுனரோ, நடந்து செல்பவர்களோ இருந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். உயிர்சேதம் ஏற்பட கூட வாய்ப்பிருக்கு.

இந்த அலட்சியத்துக்கு யார் பொறுப்பு? பொது பாதுகாப்பை உறுதி செய்யாத மெட்ரோ பணி ஒப்பந்ததாரர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து விஒசாரனை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். பொது மக்களின் பாதுகாப்பு சம்பந்தமான விஷயத்தில் அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு குறிப்பிட்டு விபத்தில் பழுதடைந்த தனது காரின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் சைத்ரா ரெட்டி. 

Trending News

Latest News

You May Like