கடவுள் ஆசீர்வாதத்தால் ஜப்பான் நிலநடுக்கத்தில் இருந்து தப்பித்தேன்... நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ட்விட்டர் பதிவு..!

ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் நேற்று முன்தினம் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மீட்டர் உயரத்துக்கும் மேல் சுனாமி அலைகள் தாக்கின.
இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அங்குள்ள சாலைகள் பெயர்ந்து பெரிதும் சேதமடைந்தன. மேலும், நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
மேலும், வஜிமா துறைமுகமும் பெரும் பாதிப்புக்குள்ளானது. புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் இந்த செய்தி நாட்டு மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என குடும்பத்துடன் ஜப்பான் சென்றுள்ளார். அப்போதுதான் எதிர்பாராத விதமாக அங்கு நிலநடுக்கும் மற்றும் சுனாமி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குடும்பத்துடன் ஜப்பானில் இருந்து கிளம்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜப்பானில் இருந்து இன்று(நேற்று) வீடு திரும்பினேன். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் எங்களுக்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கடந்த வாரம் முழுவதும் அங்கேயே இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் அதிலிருந்து மீண்டு குணமடைய வேண்டும். ஜப்பான் மக்கள் இந்த சமயத்தில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Back home today from Japan and deeply shocked by the earthquakes hitting. Spent the entire last week there, and my heart goes out to everyone affected.
— Jr NTR (@tarak9999) January 1, 2024
Grateful for the resilience of the people and hoping for a swift recovery. Stay strong, Japan 🇯🇵