1. Home
  2. தமிழ்நாடு

இன்று வங்கிகள் மூடல்.. காரணம் இது தான்..!

1

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் ஜூன் 1 ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். ஏப்ரல் 19 ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஏப்ரல் 26ஆம் தேதி வங்கிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் நாளை நடைபெற இருப்பதால் அங்கு இன்று வங்கிகளுக்கு விடுமுறை. அது மட்டுமில்லாமல் மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை காலண்டர் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like