1. Home
  2. தமிழ்நாடு

வேலியே பயிரை மேய்ந்தது போல... பயணிகளை காப்பாற்ற வேண்டிய டிக்கெட் பரிசோதகரே நண்பருடன் பலாத்காரம் செய்த கொடூரம்..!!

வேலியே பயிரை மேய்ந்தது போல... பயணிகளை காப்பாற்ற வேண்டிய டிக்கெட் பரிசோதகரே நண்பருடன் பலாத்காரம் செய்த கொடூரம்..!!

உ.பி உள்ள சந்தவுசி ரெயில் நிலையத்தில் 32 வயது பெண் இரவில் தனது 2 வயது மகனுடன் ரயிலுக்காக காத்திருந்தார்.அவர் ரெயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏற டிக்கெட் வாங்கி இருந்தார். அந்நேரம் அப்பெண்ணுக்கு தெரிந்த ராஜு சிங் என்ற டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் அப்பெண்ணிடம், `ஏன் தனியாக பொதுப்பெட்டியில் ஏறுகிறாய், அதில் அமர இடம்கூட கிடைக்காது. என்னுடன் வா, ஏ.சி.ரெயில் பெட்டியில் இடம் ஏற்பாடு செய்து தருகிறேன்" என்று கூறி ஏ.சி. பெட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். தெரிந்தவர் தானே கூப்பிடுகிறார் என நம்பி போன பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.


வேலியே பயிரை மேய்ந்தது போல... பயணிகளை காப்பாற்ற வேண்டிய டிக்கெட் பரிசோதகரே நண்பருடன் பலாத்காரம் செய்த கொடூரம்..!!



சிறிது நேரத்தில் டிசி ராஜு சிங்கும் அவரது மற்றொரு நண்பரும் அங்கு வந்து, தங்களிடமிருந்த தண்ணீரை அப்பெண்ணிடம் கொடுத்தனர். அப்பெண்ணும் தண்ணீரை குடித்தார். ஆனால் அதனை குடித்த சிறிது நேரத்தில் அப்பெண்ணிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே அப்பெண்ணுடன் உறங்கிக்கொண்டிருந்த அவரது 2 வயது மகனை அடுத்த படுக்கைக்கு மாற்றிவிட்டு இரண்டு பேரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.ராஜ்காட் முதல் அலிகார் ரயில் நிலையம் வரை இந்த சம்பவம் நடந்துள்ளது.


வேலியே பயிரை மேய்ந்தது போல... பயணிகளை காப்பாற்ற வேண்டிய டிக்கெட் பரிசோதகரே நண்பருடன் பலாத்காரம் செய்த கொடூரம்..!!

அப்பெண் அரை மயக்கத்தில் சத்தம் போட்டு கத்த முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் அப்பெண் தெரிவித்தார். உடனே அவர்கள் இது குறித்து ரெயில்வே ஹெல்ப்லைன் மூலம் புகார் செய்தனர்.

ரெயில்வே போலீஸ் எஸ்பி அபர்னா குப்தா உடனே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார். அதோடு இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் அரசு ரெயில்வே போலீசார் ராஜுசிங் வீட்டில் அவரை கைது செய்தனர். அதோடு அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவருடன் சேர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like