விரைவில் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை - அமைச்சர் மனோ தங்கராஜ்..!!
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடைபெற்றது.
இதன் விவரம்:
- ரூ.20 கோடியில் சோழிங்கநல்லூர் ELCOSEZ வளாகத்தில் உலகத்தரத்தில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.
- ரூ.40 கோடியில் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை பசுமை தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களாக சர்வதேச தரத்தில் மேம்படுத்துதல்
- The Animation, Visual Effects, Gaming and Comic கொள்கை உருவாக்கப்படும்.
- ரூ.1.72 கோடியில் தமிழ்நாடு நலத்திட்டப் பயனாளிகளுக்கான நேரடிப் பயன் பரிமாற்றத் தளம் (Tamil Nadu DBT Platform) உருவாக்கப்படும்.
- ரூ. 11 கோடியில் தமிழ்நாடு இணைய வழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவு தளம் உருவாக்கப்படும்.
- தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (AI Mission) உருவாக்கப்படும்.
- ரூ.1.20 கோடியில் கூடுதலாக 100 புதிய சேவைகளை இ-சேவைகள் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும்.
- ரூ.184 கோடியில் 20,000 அரசு அலுவலகங்கள் & நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்கப்படும்.
- ரூ.100 கோடியில் மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், அதிவேக இணைய சேவைகள் வழங்கப்படும்.
- தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT-Hub) 2ம் கட்ட மற்றும் 3வது கட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.