1. Home
  2. தமிழ்நாடு

வரதட்சணை கேட்டு இளம்பெண் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்!!

வரதட்சணை கேட்டு இளம்பெண் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்!!

திருமணமாகி 6 ஆண்டுகள் ஆனபிறகும் கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சும் (25) என்ற பெண்ணுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு இலியாஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அப்பெண்ணை கணவர் வீட்டார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், கார் வேண்டும், ரூ.2.50 லட்சம் பணம் வேண்டும் என்று வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அப்பெண் 15 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் வரதட்சணை கொடுமை குறித்து கூறியுள்ளார்.


வரதட்சணை கேட்டு இளம்பெண் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்!!


இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு அஞ்சும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அப்போது பெண்ணிடம் விசாரித்த போதுதான் அவருக்கு நடந்த கொடுமைகள் தெரியவந்தது. வரதட்சணை கேட்டு பெண்ணின் கணவர் மற்றும் அவரது வீட்டார் அஞ்சும்மை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.


வரதட்சணை கேட்டு இளம்பெண் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்!!


இதனால், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அஞ்சும் உடல்நிலை மோசமாகி மருத்துமனையில் உயிரிழந்தார். மரணத்திற்கு முன்பாக அவர் ஆசிட் குடிக்க வைத்ததை வாக்குமூலம் அளித்துவிட்டார்.

அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like