முகநூல் மற்றும் யூடியூப் தளங்களில் மீண்டும் கால் பதித்துள்ள டொனால்டு டிரம்ப்…!
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு தற்போது மீண்டும் சமூக வலைதளத்திற்கு நுழைந்துள்ளார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
வன்முறை மற்றும் கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்ட நிலையில் அனைத்து சமூக வலைதளத்தில் இருந்து அவருடைய கணக்குகள் முடக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு அவருடைய அக்கவுன்ட் மீண்டும் செயலாகப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட முகநூல் மற்றும் யூடியூப் தளங்களில் மீண்டும் அவருடைய பக்கங்கள் செயலாகப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐ அம் பேக் என்ற பதிவுடன் சமூக வலைதளங்களில் டிரம்ப்.