மாடல் அழகியை கொன்று உடலை ஃபிரிட்ஜில் வைத்த கொடூரம்!!
சொத்து தகராறில் மாடல் அழகியை கொன்று அவரது உடலை ஃபிரிட்ஜில் வைத்த கொடுமை நடந்துள்ளது.
ஹாங்காங் நாட்டை சேர்ந்த பிரபல மாடல் அழகியான அபி சோய் (28) என்பவர்தான் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் சர்வதேச அளவில் புகழ் பெற்ற மாடல். இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் பாலோயர்களை கொண்டுள்ளார்.
இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அபி சோய் திடீரென காணாமல் போனார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் தாய் போ மாவட்டத்தில் மாடல் அழகியின் உடல் பாகங்களை போலீஸார் மீட்டனர். கால்கள் மட்டும் கிடைத்துள்ளன. தலை, உடல் மற்றும் கைகளை தேடி வருகின்றனர்.
விசாரணையில் மாடல் அழகியை விவாகரத்து பெற்ற அவர் கணவர் கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறை, வேறு நாட்டிற்கு தப்பிச்செல்ல இருந்த பெண்ணின் கணவர், அவரது சகோதரர், தந்தை ஆகியோரை பிடித்தனர்.
விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் கணவரிடம் இருந்து ரூ.52.81 கோடி பணம், ஆடம்பர வாட்சுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
newstm.in