1. Home
  2. தமிழ்நாடு

பெங்களூருவில் அசைவ விற்பனைக்கு தடை..!!

பெங்களூருவில் அசைவ விற்பனைக்கு தடை..!!

4வது 'ஏரோ இந்தியா 2023' நிகழ்ச்சி பிப்ரவரி 13 முதல் 17 வரை பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெறுகிறது. போட்டி நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் இடத்திலிருந்து 10 கிமீ சுற்றளவில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை இறைச்சிக் கடைகள், அசைவ ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை மூட பெங்களூரு சிவில் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.


பெங்களூருவில் அசைவ விற்பனைக்கு தடை..!!

மேலும், இந்த உத்தரவை மீறினால், தண்டனை விதிக்கப்படும் என வலியுறுத்தியுள்ளது. இதை மீறினால் பிபிஎம்பி சட்டம்-2020 மற்றும் இந்திய விமான விதிகள் 1937ன் விதி 91ன் கீழ் தண்டனை விதிக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கொட்டப்படும் அசைவ உணவுகள் அதிக அளவில் பறவைகளை ஈர்க்கிறது, குறிப்பாக , நடுவானில் விபத்துகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பிபிஎம்பி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Trending News

Latest News

You May Like