1. Home
  2. தமிழ்நாடு

பழம் பறித்த பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை: உபியில் தொடரும் தீண்டாமை..!

பழம் பறித்த பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை: உபியில் தொடரும் தீண்டாமை..!

கொய்யாப்பழம் பறித்ததற்காக பட்டியலின இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இவர், அந்த பகுதியில் உள்ள மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர் தோட்டத்தில் கொய்யாப்பழம் தொங்குவதை கண்டுள்ளார்.


நீண்ட நாள் அதை பறிக்க எண்ணிய இவர், சம்பவத்தன்று அந்த பகுதியில் யாரும் இல்லை என்று நினைத்து அந்த கொய்யாப்பழத்தை பறித்துள்ளார். இதனை கண்ட மாற்று சமுதாயத்தை சேர்ந்த அந்த தோட்டத்தின் உரிமையாளரான பீம்சென் மற்றும் பன்வாரிலால் ஆகிய இருவரும் ஓம் பிரகாஷை திட்டியுள்ளனர்.

மேலும் அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஓம் பிரகாஷ், மயக்கமாகியுள்ளார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பழம் பறித்த பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை: உபியில் தொடரும் தீண்டாமை..!

இந்த சம்பவம் குறித்து ஓம்பிரகாஷின் சகோதரர் சத்யபிரகாஷ் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியான பீம்சென் மற்றும் பன்வாரிலால் ஆகிய இருவர் மீதும் கொலை மற்றும் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Trending News

Latest News

You May Like