டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்!!
மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் மதுபான கூடங்களை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து பணப்பரிமாற்ற முறைகேடு புகாரில் மணிஷ் சிசோடியாவுக்கு அமலாகத்துறையினர் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். பின்னர் சிசோடியாவை கைது செய்தனர். தற்போது மணிஷ் சிசோடியா சிறையில் உள்ளார்.
இந்நிலையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16 ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், பாஜக திட்டமிட்டு சம்மன் அனுப்பி இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும், சிபிஐ முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆவார் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
newstm.in