1. Home
  2. தமிழ்நாடு

கவனக்குறைவால் தவறு நேர்ந்து விட்டது... மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் கேட்ட முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!

கவனக்குறைவால் தவறு நேர்ந்து விட்டது... மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் கேட்ட முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா (17). இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார்.

சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

கவனக்குறைவால் தவறு நேர்ந்து விட்டது... மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் கேட்ட முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி அவரது காலை மருத்துவர்கள் அகற்றினர். அதன் பின்னர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவி பிரியாவின் மரணத்திற்கு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சைதான் காரணம் என தெரியவந்தது. பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை மருத்துவர்களான சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


கவனக்குறைவால் தவறு நேர்ந்து விட்டது... மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் கேட்ட முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!

பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்ட சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், இதுவரை பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். கவனக்குறைவால் தவறு நேர்ந்து விட்டது. மருத்துவக் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டி இருப்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், தங்களை வெளியே இருக்க அனுமதிப்பதால் , சாட்சிகளை கலைக்கப் போவதில்லை எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, எங்கள் குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர், முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து பணி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிட்டேன் என்று எப்படி கூற முடியும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தற்போதுதான் சம்பவம் நடந்துள்ளது; விசாரணை நடத்த சிறிது அவகாசம் வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும்; மருத்துவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்தக்கூடாது என நீதிபதி கூறினார். உங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது; வேண்டுமானால் சரணடையுங்கள் என நீதிபதி ஜெகதீஸ் சந்திரா தெரிவித்தார். மேலும், மருத்துவர்கள் பால் ராம் சங்கர், சோமசுந்தரருக்கு முன்ஜாமினை வழங்க நீதிபதி ஜெகதீஸ் சந்திரா மறுப்பு தெரிவித்துவிட்டார்.



Trending News

Latest News

You May Like