1. Home
  2. தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் கலவரம்… போலீஸ் குவிப்பு!!

கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் கலவரம்… போலீஸ் குவிப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த சங்கர், சிவபுரம் கிராமத்தை சேர்ந்த செங்கோட்டையன் ஆகிய இருவரும் 3 மாதத்துக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

இந்த விபத்தால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது. இதன் காரணமாக நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் நேற்று 5 பேரை கைது செய்தனர். இரண்டு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அந்த கிராமங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.


கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் கலவரம்… போலீஸ் குவிப்பு!!

மேலும் மூக்கனூர் மற்றும் சிவபுரம் ஆகிய இரண்டு கிராமங்களில் கலவரம் ஏற்படாமல் இருக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கலவரம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்பினர் மோதிகொண்ட சம்பவத்தால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like