1. Home
  2. தமிழ்நாடு

கடன்கள் ரத்து.. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

கடன்கள் ரத்து.. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்து அதற்கான வசதிகள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.


சென்னை ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கும்.

சுய உதவிக் குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். தமிழக முதலமைச்சர் மகளிர் சார்ந்த திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை, முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சுய உதவிக் குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்தவித கடன் கேட்டு வந்தாலும் அவர்களுக்கு கடன் கொடுக்க மத்திய கூட்டுறவு வங்கி தயாராக இருக்கிறது" எனக் கூறினார்.

Trending News

Latest News

You May Like