1. Home
  2. தமிழ்நாடு

எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டிருக்குமா? சீமானிற்கு அமைச்சர் சேகர்பாபு பதில்..!!

எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டிருக்குமா? சீமானிற்கு அமைச்சர் சேகர்பாபு பதில்..!!

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேஸ்வர் திருக்கோவிலில் இந்து அறநிலை துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள சந்தித்த அவர் கூறியதாவது,

கங்காதரேசுவர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உண்டான திருப்பணிகள் அடுத்த எட்டு மாதங்களுக்குள்ளாக முடிக்க நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். தி.மு.க. ஆட்சியில் தான் உபயதாரர்கள் மனமுவந்து தரும் தொகை முழுமையாக திருக்கோவிலுக்கு செய்யப்படும் என நம்பிக்கை வந்துள்ளது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, திருக்கோயில்களுக்கு உபயதாரர்கள் மூலமாக 600 கோடி ரூபாய் வரை நன்கொடை வந்துள்ளது என்று தெரிவித்தார்.

பின்னர் பேனா சிலை குறித்த சீமானின் பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கையில், சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டிருக்குமா? கை அவருக்கு மட்டும்தான் இருக்கா. எல்லாருக்கும் கை இருக்கு. இந்த பதிலே அவருக்கு போதும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like