1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையும், விடுமுறையும்!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையும், விடுமுறையும்!!

மாண்டல் புயல் கரையை கடந்திருந்தாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீர் ஜான் கூறியுள்ளார்.

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் நாளை மறுநாள், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.


அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையும், விடுமுறையும்!!

இதனிடையே, மாண்டஸ் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும் வலுவிழந்தது.

இந்நிலையில் புயல் கரையை கடந்தாலும் இரண்டு தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கேற்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கக்கூடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like