1. Home
  2. தமிழ்நாடு

யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது..!

1

தலைசிறந்த இலக்கியவாதிகளுக்கு சாகித்ய அகாடமி பல பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு, சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுக்கு, 'விஷ்ணு வந்தார்' என்ற சிறுகதை தொகுப்பு எழுதிய லோகேஷ் ரகுராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பால புரஸ்கார் விருதுக்கு, 'தன்வியின் பிறந்த நாள்' கதைத்தொகுப்பு எழுதிய யூமா வாசுகி தேர்வாகி உள்ளார்.

பட்டுக்கோட்டையில் பிறந்த யூமா வாசுகி, கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர். 'தோழமை இருள்', 'இரவுகளின் நிழற்படம்', 'அமுத பருவம்', 'வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை உருவாக்கினார்.
'உயிர்த்திருத்தல்' எனும் சிறுகதைத் தொகுப்பு, 'ரத்த உறவு', 'மஞ்சள் வெயில்' ஆகிய நாவல்களும் எழுதியவர். கனிந்த, நெகிழ்வான தனித்த மொழிநடையால் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்தவர். 'கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை 'கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, 2017ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தார்.

Trending News

Latest News

You May Like