1. Home
  2. தமிழ்நாடு

வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான்..!

W

பிரபல யூடியூபர் இர்ஃபான் சமீபத்தில் தனது குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டு அதனைத் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் இது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது மனைவியின் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதோடு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக இர்ஃபான் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கச் சொல்லி உத்தரவிட்டார். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.அதன்பிறகு சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கி இர்ஃபான் மன்னிப்பு கேட்டதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் யூடியூபர் இர்ஃபான் சர்ச்சையில் சிக்கினார்.

இர்ஃபான் தனது மனைவியுடன் காரில் சென்று ஏழைகளுக்கு உதவி பொருள்களை வழங்கியதைத் தனது யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.அதில் இர்ஃபான் மற்றும் அவரது மனைவி இருவரும் உணவு மற்றும் பொருட்களை வழங்குகிறார்கள். அப்போது பெண் ஒருவர் உதவி பொருட்களை வேகமாக வாங்கியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த இர்ஃபான்இப்படி அசிங்கமா பண்ணாதீங்கமா.. ஏம்மா பிடிச்சு இழுக்காதீங்க.. கொடுக்க தானே வந்திருக்கோம்.. ஏன் பிடிச்சு இழுக்குறீங்க என திட்டும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் இர்ஃபானை கடுமையாக விமர்சித்து வருகிறனர்.தற்பொழுது இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பேசுப்பொருளாக மாறியது.

ரம்ஜான் பண்டிகை முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தனது செயலுக்கு இர்ஃபான் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இர்ஃபான் வெளியிட்ட வீடியோவில் இர்ஃபான் கூறியதாவது:-

ரம்ஜான்  அன்று வெளியிட்ட வீடியோவை பார்த்து இருப்பீர்கள். நான் அதைப்போல பண்ணியிருக்க கூடாது. அத்தகைய செயல் தவறானது. கொடுக்க (உதவி) போன இடத்தில் அந்த மாதிரி பேசியிருக்க கூடாது. ரியாக்ட் பண்ணியிருக்க கூடாது. நான் சிரிக்கிறேன் என்று சிலர் சொன்னார்கள். நான் அந்த மாதிரி ஆள் இல்லை.

யாருமே அப்படி இருக்க மாட்டார்கள். படத்தில் வில்லன்கள் தான் ஏழையாக இருப்பவர்களை பார்த்து சிரிப்பார்கள். இல்லாத மக்களை பார்த்து யாருமே சிரிக்க மாட்டார்கள். அப்படி ஒரு ஆள் உலகத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. நான் அப்படி சிரிப்பவன் இல்லை. இல்லாதவர்களை பார்த்து நான் சிரித்தது போல சித்தரிக்கிறார்கள்.

அந்த மாதிரி ஆள் நான் இல்லை. அதுபோக அங்கே இருந்தவர்களை அதுங்க இதுங்க என்று கூப்பிட்டேன் என்று சொல்கிறார்கள். நான் அப்படி சொன்னது அங்கே இருந்த சிறுவர்களைத்தான். எங்கள் வீட்டில் சின்ன பசங்களை உரிமையாக அப்படித்தான் கூப்பிடுவோம். என்னுடைய வீடியோவை பார்து இருந்தால் உங்களுக்க்கு தெரியும். கண்டிப்பாக அப்படி சொல்லியிருப்பேன். தேடி காட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே அப்படித்தான் பேசி பழக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like