1. Home
  2. தமிழ்நாடு

யூடியூபர் பெலிக்ஸ் ஜாமின் மனு தள்ளுபடி..!

1

காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக யூடியூபர் சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், யூடியூபர் சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி பெலிக்ஸ் ஜெரால்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் தன் மீது பதியப்பட்டுள்ளது. சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்க மாட்டேன். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like