1. Home
  2. தமிழ்நாடு

பணம் கொடுத்த நண்பனின் பைக்கை எரிந்த இளைஞர்கள்.. கஞ்சா போதையில் வெறிச்செயல் !



புதுக்கோட்டையைச் சேர்ந்த ரங்கராஜ் (23) என்ற இளைஞர் சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மேகநாதன் என்பவருடன் சைதாப்பேட்டை தங்கியிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரங்கராஜ், மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள முனுசாமி தெருவில் குடியேறியுள்ளார். பழைய வீட்டின் வாடகை பாக்கியான ரூ. 2 ஆயிரத்தை ரங்கராஜிடம் மேகநாதன் கேட்டுள்ளார். அப்போது கம்பெணியில் சம்பளம் போட்டதும் வாடகையை தருவதாக ரங்கராஜ் கூறியுள்ளார்.

பிறகு இருவருக்கும் இடையே பண விவகாரம் தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. இதனால் நண்பர்களாக இருந்த இருவருக்கும் இடையே பகை மூண்டு விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கண்ணம்மாபேட்டையில் உள்ள தனது நண்பரான மணிமாறன் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு மேகநாதன் சென்றுள்ளார். அப்போது இருவரும் மது அருந்தும்போது தனது பிரச்னை குறித்து மணிமாறனிடம் கூறியுள்ளார். போதையில் இருந்த மணிமாறன் வா உடனே சென்று வாடகை பணம் கேட்கலாம்.. நான் வாங்கி தருகிறேன் என மேகநாதனை அழைத்துச் சென்றுள்ளார்.

பணம் கொடுத்த நண்பனின் பைக்கை எரிந்த இளைஞர்கள்.. கஞ்சா போதையில் வெறிச்செயல் !

அதன்படி இருவரும் மேற்கு சைதாப்பேட்டை முனுசாமி தெருவிலுள்ள ரங்கராஜ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு வாடகை பணத்தை மெதுவாக கொடு இப்போது கஞ்சா வாங்குவதற்கு பணம் கொடு என்று பிரச்னை செய்துள்ளனர். இதனால் பயந்துபோன ரங்கராஜ் தன்னிடம் இருந்து 900 ரூபாயை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணத்தை வாங்கிக்கொண்டு சென்ற மணிமாறன், மேகநாதன் ஆகியோர் சிறிது நேரத்தில் திரும்பவந்து, ரங்கராஜியின் விலை உயர்ந்த பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டுச் சென்றுவிட்டனர். இது தொடர்பான புகாரில் மணிமாறனை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மேகநாதனை தேடி வருகின்றனர்.

newstm.in


Trending News

Latest News

You May Like