1. Home
  2. தமிழ்நாடு

மகளிர் கல்லூரியில் 2,000 புத்தகங்கள், 20 மின் விசிறி திருடிய இளைஞர்கள் !!

மகளிர் கல்லூரியில் 2,000 புத்தகங்கள், 20 மின் விசிறி திருடிய இளைஞர்கள் !!


சென்னை பிராட்வே சாலையில் பாரதி மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சென்னையில் செயல்படும் கல்லூரிகளில் பிரதான கல்லூரிகளில் இதுவும் ஒன்று. ஏராளமான மாணவிகள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். அமைச்சர் பி.கே.சேகர்பாபு வருகையை தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரி நேரடியாக இயங்காமல் இருந்ததை பயன்படுத்தி, கல்லூரி வளாகத்தில் இருந்த 85க்கும் மேற்பட்ட மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

மேலும், கல்லூரியின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த புத்தகங்கள் மற்றும் மின் மோட்டார் திருடு போனது தெரிந்தது. இதுபற்றி கல்லூரியின் முதல்வர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அப்பகுதியில் உள்ள ஒரு புத்தக கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, பாரதி கல்லூரியின் சீல் இருந்ததும், அந்த புத்தகங்கள் விற்பனைக்கு இருந்ததும் தெரியவந்தது.

மகளிர் கல்லூரியில் 2,000 புத்தகங்கள், 20 மின் விசிறி திருடிய இளைஞர்கள் !!

இதுபற்றி விசாரித்தபோது, அப்பகுதியை சார்ந்த வினோத் குமார், வீரமணி, தீபன், வெங்கடேசன், பாபு, சூரி, ஆகிய 6 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இவர்கள், கல்லூரி வளாகத்தில் இருந்து பொருட்களை திருடி பழைய இரும்பு கடையில் விற்றது தெரியவந்தது. மேலும் 20 மின் விசிறிகள், 3 மோட்டார்கள், 2000 புத்தகங்கள் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

அதேநேரத்தில் இவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை வாங்கிய பாஸ்கர், ராமநாதன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்ணன், வடிவேலன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like