1. Home
  2. தமிழ்நாடு

1000 ரூபாய் கடனை திருப்பிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை!

1000 ரூபாய் கடனை திருப்பிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை!


வெறும் 1,000 ரூபாய் கடனுக்காக 19 வயது இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி வெல்கம் பகுதியில் வசிக்கும் சோஹைல் மற்றும் ஃபரான் ஆகிய இருவரும் தங்களது நண்பரான அமானிடமிருந்து ரூ.1000 கடன் வாங்கினர். இதனையடுத்து அமான் பலமுறை கேட்டும் இருவரும் கடனை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பணம் திருப்பித் தராததால் சோஹைலை அமன் தாக்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் சோஹைல் மற்றும் ஃபர்ஹான் இருவரும் அமானின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் இருவரும் அமானுடன் பேசி சமரசம் செய்து கொள்ள விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அப்போது மூன்று நண்பர்களும் கடன் வாங்கிய பணம் குறித்து வாக்குவாதம் செய்யத் தொடங்கினர்.

வாக்குவாதம் அதிகரித்தபோது, சோஹைலும் ஃபர்ஹானும் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அமானை ஐந்து முதல் ஆறு முறை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதையடுத்து அமான் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  தப்பியோடிய சோஹைல் மற்றும் ஃபர்ஹான் இருவரையும் கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like