பிறந்தநாள் கொண்டாடிவிட்டு திரும்பிய இளைஞர் அடித்துக்கொலை..

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் இளைஞர் எலிசா (19) தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது நண்பர் லட்சுமணன், தனது அண்ணன் குழந்தை பிறந்தநாள் விழாவுக்கு எலிசாவை அழைத்துச் சென்றார்.
விழா முடிந்து இரவு 10 மணியளவில் லட்சுமணனை, அவரது வீட்டில் இறக்கிவிட்டு பைக்கில் எலிசா வீட்டுக்கு புறப்பட்டார். சிறுகாவேரிப்பாக்கம் வழியாக எலிசா சென்றபோது, முட்புதரில் மறைந்திருந்த மர்மநபர்கள் திடீரென எலிசாவை ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த நிலையில் அடுத்த விநாடியே அக்கும்பல் இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அவரது பைக்கை எடுத்துகொண்டு தப்பினர்.
இதில் படுகாயமடைந்த எலிசா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், எலிசாவின் தாய்மாமன் சார்லஸ் கடந்த 2018ஆம் ஆண்டு. தாமோதரன் என்பவரது கடையில் பீடி கடனாக கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் தகராறு ஏற்படவே சார்லஸ் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான புகாரில் சார்லஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சம்பவத்தால் எலிசாவுக்கும், தாமோதரனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையொட்டி, எலிசாவை தீர்த்துக்கட்ட தாமோதரன் முடிவு செய்தார். இதுனால் அவரை தீவிரமாக கண்காணித்து வந்து தற்போது கொலை செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இதைதொடர்ந்து போலீசார், தலைமறைவாக இருந்த தாமோதரன், அரிகரன் (20), கிருஷ்ணகுமார் (22), கிஷோர்குமார் (22) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in