1. Home
  2. தமிழ்நாடு

இளைஞர்களே ரெடியா ? இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; 30,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு!

1

தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தையும் சுற்று இருக்கும் முன்னணி தனியார் நிறுவனங்களை ஒன்றிணைந்து இந்த முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. மேலும், திறன் பயிற்சிக்கான பதிவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றியுடன் எடுத்துரைக்கப்படுகிறது. அந்த வகையில், மார்ச் 29-ம் தேதி சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

சென்னை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

  • தலைநகரமான சென்னையில் மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நந்தனை அரசு கலைக் கல்லூரி (Government Arts College, Nandanam) வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இதன் மூலம் 20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்களுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
  • மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரையும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை பெற்று பயனடையலாம்.

முன்பதிவு செய்வது எப்படி?
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://forms.gle/BwSbRZjTQkcRFEVf8 என்ற கூகுள் படிவத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்
மாயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசு நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 29-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீர்காழி என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப் பணியிடங்களுக்காக 10,0000க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ மற்றும் இதர பட்டதாரிகள் என அனைவரும் கலந்துகொண்டு கல்வித்தகுதிக்கு ஏற்ப பணி வாய்ப்புகளை பெறலாம்.


தேவையான ஆவணங்கள்
  • சுய விவர அறிக்கை
  • கல்விச்சான்றுகள்
  • ஆதார் அட்டை
  • பாஸ்போட் அளவு புகைப்படம்
  • முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளபவர்கள் மற்றும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த விவரங்களுக்கு https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கல்வித்தகுதிக்கு ஏற்ப முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம்.

Trending News

Latest News

You May Like