1. Home
  2. தமிழ்நாடு

கஞ்சா போதையில் அரிவாளால் ஜூஸ் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்!!

கஞ்சா போதையில் அரிவாளால் ஜூஸ் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்!!


கஞ்சா போதையில், அரிவாளால் ஜூஸ் கடையில் இருந்த பாட்டில்களை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஜூஸ் கடைக்கு கடந்த 4 இளைஞர்கள் சென்றனர். அப்போது, திடீரென மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து, கல்லாப் பெட்டியின் முன்னால் வைத்திருந்த பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேடவாக்கத்தைச் சேர்ந்த மணி () சூரை மணிகண்டன் (19), சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் () ஜிலேபி சுரேஷ் (40), சரண்ராஜ் (21), சலீம் (34), ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கஞ்சா போதையில் அரிவாளால் ஜூஸ் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்!!

இதில், சுரேஷ் () ஜிலேபி சுரேஷ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 35 வழக்குகளும், மணி () சூரை மணிகண்டன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 14 குற்ற வழக்குகளும் இருப்பது தெரியவந்தது.

சரண்ராஜ் மீது கஞ்சா உள்ளிட்ட இரண்டு வழக்குகளும், சலீம் மீது சண்டை உள்ளிட்ட இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like