பெண்களிடம் பேண்ட்டை கழட்டிக்காட்டிய இளைஞர்கள்!
![பெண்களிடம் பேண்ட்டை கழட்டிக்காட்டிய இளைஞர்கள்!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/0cdbcf4e01b999479a9138c4802e1232.webp?width=836&height=470&resizemode=4)
சாலையில் சென்ற இரண்டு பெண்களை அழைத்து முகவரி கேட்பது போல் நடித்து இளைஞர்கள் இரண்டு பேர் பேண்ட்டை கழட்டி அந்தரங்க உறுப்பை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வித்யாவிஹார் ரயில் நிலையம் அருகே இளைஞர்கள் இரண்டு பேர் ஒரு காரில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியே வந்த இரண்டு பெண்கள் மறித்த இருவரும் முகவரி ஒன்றை காட்டி தெரியுமா என்று கேட்டனர்.
அவர்கள் முகவரியை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென இருவரும் தங்கள் பேண்ட்டை கழட்டி அந்தரங்க உறுப்பை பெண்களிடம் காட்டினர். அதிர்ச்சி அடைந்த இரண்டு பெண்களும் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.
பிறகு அவர்கள் அந்த காரின் நம்பரை நோட் பண்ணி அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களின் காரை மும்பையின் நட்ராஜ் பார் அருகே பிடித்தனர்.
அப்போது அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிகிறார் என்று தெரிய வந்துள்ளது. அவர் தன்னுடைய நண்பரின் காரில் அமர்ந்து கொண்டு இப்படி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in