வித்தியாசமான ஹெல்மெட் அணிந்த வாலிபர்... அபராதத்தை விதித்த போலீசார்..!
![11](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/8f8256bf898ec086c5eb4fa14e4a5d5c.jpg?width=836&height=470&resizemode=4)
தென்காசி மாவட்டம் குற்றாலம் என்பது தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கிறது. இங்கு ஏராளமான மக்கள் சுற்றுலாவிற்காக வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலையில் ஐயப்ப சீசன் இருப்பதால் குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றாலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முயல் போன்ற வித்தியாசமான ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர் தனது பைக்கில் வலம் வந்துள்ளார். இவர் பைக்கில் வேகமாக சாலையில் செல்வதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் குற்றாலத்தில் சாலை விதிகளுக்குப் புறம்பாக, விநோதமான வகையில் ஹெல்மெட் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஒட்டி சென்ற சுஜித் என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த குற்றாலம் போலீசார் சுஜித்துக்கு ₹10,000 அபராதம் விதித்து, அவரது இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குற்றாலத்தில் அபாயகரமான முறையில் வாகனத்தில் சென்ற நபருக்கு அபராதம் விதிப்பு...#TenkasiDistrictPolice #SouthZoneTNpol #TamilnaduPolice #TruthAloneTriumph #tenkasipolice #tenkasi pic.twitter.com/1zM5jlnJJY
— Tenkasi District Police (@TenkasiPolice) November 28, 2023