இளம்பெண் கர்ப்பம்.. காதலித்து உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுக்கும் காவலர் !
![இளம்பெண் கர்ப்பம்.. காதலித்து உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுக்கும் காவலர் !](https://newstm.in/static/c1e/client/106785/migrated/0777d276d4814334be3484d5cd817653.jpg?width=836&height=470&resizemode=4)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த திருச்சுழி பகுதியில் சண்முகம், சாந்தகுமாரி தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன் திருமுருகன் (27) மதுரை சிறப்புக் காவல்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
திருமுருகனும், அதே ஊரைச்சேர்ந்த இவரது அத்தை மகள் வனிதா (21) காதலித்து வந்தனர். அப்போது இருவரும் நெருங்கிப் பழகி உல்லாசம் அனுபவித்துள்ளனர். அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்ததால் வனிதா கர்ப்பமடைந்தார்.
வனிதா தான் கர்ப்பமடைந்திருப்பதை திருமுருகனிடம் கூறினார். மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினரும் அறிந்து அதிர்ச்சியானர். பின்னர் பெண்ணின் குடும்பத்தினர் காவலர் திருமுருகனிடமும் அவரது பெற்றோரிடமும் எடுத்துக்கூறி திருமணம் செய்துவைக்க பேசினர்.
ஆனால், திருமுருகனும் அவரது பெற்றோரும் திருமணத்திற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மிகவும் மனமுடைந்த வனிதா திருமுருகன் தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாகவும், திருமுருகனின் பெற்றோரும் திருமணம் செய்துவைக்க மறுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவலர் திருமுருகன் மற்றும் அவரது பெற்றோர் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in