வாய்ப்பு கிடைக்காததால் இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

கொரோனா பொதுமுடக்கத்தின் போது வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இளம் நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போஜ்புரி படங்களில் நடித்து வந்தவர் அக்ஷத் உர்கர்ஷ். பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த இவர் எம்பிஏ படித்திருந்தார். இந்தி படங்களில் நடிப்பதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன் மும்பை வந்த இவர் அந்தேரி பகுதியில் வாடகை வீட்டில் தனது தோழியுடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அவரது தோழி நடிகரின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேலை இல்லாததால், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி இருந்த அக்ஷத் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்ஷத்தின் உறவினர்கள், இது கொலை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
newstm.in