வாயை பொத்திட்டு இருக்கணும்.. வெளுத்து வாங்கிய கங்கை அமரன்..!
"படிக்காத பக்கங்கள்" என்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து "இசை பெரியதா? பாடல் பெரியதா" என்று இளையராஜாவை அசிங்கப்படுத்தி பேசியது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.பாடலாசிரியரும் பாடல்களுக்குச் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதனை மேற்கோள் காட்டி வைரமுத்து இந்த கருத்தை பேசியிருந்தார்.
இந்நிலையில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு பகிரங்கமாக வைரமுத்துவை தாக்கி சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்து விட்டார். வைரமுத்துவை வளர்த்து விட்டதே நாங்கள்தான் என்றும் இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார் என்றும் வைரமுத்துவுக்கு கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லை என விளாசிவிட்டார்.
மேலும், வைரமுத்து நல்ல பாடலாசிரியர் தான். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது என வைரமுத்துவை எந்த அளவுக்கு மோசமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு மோசமாக பேசி இதற்கு மேல் வைரமுத்து இளையராஜா பற்றி தவறாக ஏதாவது பேசினால் நடப்பதே வேறு என எச்சரித்துள்ளார்.
இளையராஜாவை சீண்டிய வைரமுத்து..! விளைவை வேறு மாதிரி சந்திப்பீர்கள்.. வாயை பொத்திட்டு இருக்கணும்.. வெளுத்து வாங்கிய கங்கை அமரன்..#Vairamuthu | #Ilayaraja | #GangaiAmaran | #ViralVideo | #PolimerNews pic.twitter.com/MWLDC693VV
— Polimer News (@polimernews) April 30, 2024