நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்... அதுவும் மாதம் வெறும் 3000 ரூபாய் முதலீட்டில்..!

PPF (பொது வருங்கால வைப்பு நிதி) திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்வது என்பது உங்கள் வசதி, விருப்பம் மற்றும் திறனைப் பொறுத்தது. எனினும், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1,50,000 டெபாசிட் செய்யலாம். தற்போது, PPF கணக்கிற்கு 7.1 சதவீத ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இதில் மாதந்தோறும் ரூ.3,000, ரூ.5,000 அல்லது ரூ.10,000 முதலீடு செய்தால், முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
PPF கால்குலேட்டர்: மாதாந்திர முதலீடு ரூ.3,000
PPF திட்டத்தில் மாதாந்திர முதலீடு: ரூ.3,000
ஒரு வருடத்தில் கணக்கில் செய்யப்படும் முதலீடு: ரூ.36,000
PPF வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1%
15 ஆண்டுகளில் செய்யப்படும் மொத்த வைப்புத் தொகை: ரூ.5,40,000
15 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த நிதி: ரூ.9,76,370
முதலீட்டிற்கான வட்டி வருமானம்: ரூ.4,36,370
முதிர்வு வரை அதாவது 15 ஆண்டுகளுக்கு PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி, ரூ.9,76,370 என்ற அளவில் நிதியை திரட்டலாம்.
PPF கால்குலேட்டர்: மாதாந்திர முதலீடு ரூ.5,000
PPF திட்ட மாதாந்திர முதலீடு: ரூ.5,000
ஒரு வருடத்தில் கணக்கில் செய்யப்படும் முதலீடு: ரூ.60,000
PPF வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1%
15 ஆண்டுகளில் செய்யப்பட்ட மொத்த வைப்புத் தொகை: ரூ.9,00,000
15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த நிதி: ரூ.16,27,284
முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானம்: ரூ.7,27,284
முதிர்வு வரை அதாவது 15 ஆண்டுகளுக்கு PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி, ரூ.16,27,284 என்ற அளவில் நிதியை திரட்டலாம்..
PPF கால்குலேட்டர்: மாதாந்திர முதலீடு ரூ.10,000
PPF திட்ட மாதாந்திர முதலீடு: ரூ.10,000
ஒரு வருடத்தில் கணக்கில் செய்யப்பட்ட மொத்த முதலீடு: ரூ.1,20,000
PPF வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1%
15 ஆண்டுகளில் செய்யப்பட்ட மொத்த வைப்புத்தொகை: ரூ.18,00,000
15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த நிதி: ரூ.32,54,567
முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானம்: ரூ.14,54,567
முதிர்வு வரை, அதாவது 15 ஆண்டுகளுக்கு PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி, ரூ.32,54,567 என்ற அளவில் நிதியை திரட்டலாம்.
எந்தவொரு இந்திய குடிமகனும் பொதுத் துறை வங்கிகளில் தபால் அலுவலகத்தில் இந்தக் கணக்கைத் திறக்கலாம்.