இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும் - பிரகாஷ் ராஜ்..!

தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார். மத்திய மந்திரியின் இந்த பேச்சை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..
எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.
ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..
இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. என்று தெரிவித்துள்ளார்.