1. Home
  2. தமிழ்நாடு

நாளை விசாரணைக்கு ஆஜராகிறார் எடியூரப்பா..!

1

சிஐடி விசாரணைக்கு ஆஜராகவிருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முன் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிக்காக தில்லி சென்றிருந்தேன். ஜூன் 17-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக எழுத்துப்பூர்வமாக முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். சிஐடிக்கு (கைது செய்ய) தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நான் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகிறேன்.

தேவையில்லாமல் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை, அனைவருக்கும் தெரியும். சதியில் ஈடுபடுவோருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Trending News

Latest News

You May Like