1. Home
  2. தமிழ்நாடு

உங்க தோப்பானார் வீட்டு காசையா கேட்டோம் என்றால் நல்லா இருக்குமா?

1

சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். இதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. 100 சென்டி மீட்டருக்கு மேல் கொட்டிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இதனை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு , 6000 ரூபாய் நிவாரணம் அறிவித்து. ஆனால் அந்த தொகையே பலருக்கு இதுவரை வந்து சேரவில்லை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் திமுக எம்பியான தயாநிதி மாறன், வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்ட தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதியாக 12,650 கோடியை கேட்டிருந்தார். ஆனால் இதுவரை எங்களுக்கு கிடைத்தது பூஜ்ஜியம்தான். ஒரு நயா பைசா கூட கொடுக்கவில்லை.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்து பார்த்தார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து பார்த்தார்கள், கையசைத்தார்கள், பேசினார்க்ள ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் சென்றுவிட்டார்கள். எங்கள் தமிழ்நாட்டின் எதிர்காலம் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் உங்கள் அப்பா வீட்டு காசை கேட்கவில்லை எங்கள் வரிபணத்தை கேட்கிறோம் என்றார்.அதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பிரஸ் கான்ஃபிரன்ஸ் வைத்து ஒரு மணி நேரம் எங்களை வசைப்பாடினார். உதயநிதி, உங்க அப்பா வீட்டு காசா? உங்க ஆத்தா வீட்டு காசா? என்றெல்லாம் பேசக்கூடாது என்றார். பிரதமர் மோடி உங்க சாச்சா வீட்டு காசா என்று கேட்டாரே அப்போது ஏன் நிர்மலா சீதாராமனுக்கு அறிவுரை வழங்க நேரமில்லை.

நான் நிர்மலா சீதாராமனை பார்த்து உங்க தோப்பானார் வீட்டு காசையா கேட்டோம் என்றால் நல்லா இருக்குமா? உங்கள் பேச்சில் வன்மம் உள்ளது.. என நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்தார் திமுக எம்பி தயாநிதி மாறன்.

Trending News

Latest News

You May Like