1. Home
  2. தமிழ்நாடு

ட்விட்டரில் டிரெண்டாகி வரும் '#worldwar3' ஹேஷ்டேக்..!

1

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவின் டமாஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரான் தூதரகம் சேதமடைந்தது. இதில், 2 முக்கிய தளபதிகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும் ஈரான் பதில் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 


இந்நிலையில், 13 நாள் கழித்து இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதலை தொடங்கியிருக்கிறது.  ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில், இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சேதம் ஏற்பட்டதாகவும், ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பக்கத்து நாடுகளின் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


ஈரானின் தாக்குதலை தொடர்ந்து, போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், அமெரிக்க அதிபர் பைடன், வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்புக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  பைடனின் பலவீனமான செயல்பாடே இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இதேபோல், ஈரானின் வான்வழி தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தவும் ஐ.நா. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில்,சமூக வலைதளங்களிலும் மூன்றாம் உலகப்போர் பற்றி பேசப்படுகிறது. சமீப காலம் வரை ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது.. இப்போது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கும் என்று தெரிகிறது. இந்நிலையில், ட்விட்டரில் '#worldwar3' என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Trending News

Latest News

You May Like