திமுக அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய பெண் கொலை?

பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் படுகொலை செய்யப்பட்டவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த பாஜக நிர்வாகி சரண்யா என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர் மதுரை மத்திய தொகுதி பாஜக மகளிர் அணி பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சரண்யா கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தாராம். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததாக தெரிகிறது.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட சரண்யா யார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இவர்தான் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசியவர்.