1. Home
  2. தமிழ்நாடு

நிர்வாணமாக தூக்கில் தொங்கிய பெண்.. ஏற்காட்டில் நடந்தது கொலையா? தற்கொலையா? கொழுந்தனிடம் விசாரணை

நிர்வாணமாக தூக்கில் தொங்கிய பெண்.. ஏற்காட்டில் நடந்தது கொலையா? தற்கொலையா? கொழுந்தனிடம் விசாரணை


தனியார் தங்கும் விடுதியில் பெண் மர்மான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அந்த பெண்ணின் கணவரின் சகோதரரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவரும், இவருடைய அண்ணி உறவுமுறைகொண்ட மஞ்சு (26 ) என்ற பெண்ணும் ஏற்காடுக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கு தனியார் தங்கும் விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து நேற்று இரவு தங்கி உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

நிர்வாணமாக தூக்கில் தொங்கிய பெண்.. ஏற்காட்டில் நடந்தது கொலையா? தற்கொலையா? கொழுந்தனிடம் விசாரணை

இதனிடையே விஜய் இரவு மது அருந்திவிட்டு தனக்கு திருமணம் நடக்கப் போவதாகவும் திருமணத்திற்கு பின்னர் தங்களது நட்பை தொடர முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரவு அங்கேயே தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென இரவு மூன்று மணியளவில் விஜய் கண்விழித்து பார்க்கும் போது, மஞ்சுவை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த விஜய், கழிவறைக்கு சென்று பார்த்தப்போது உள்பக்கமாக கதவு தாப்பாள் போடப்பட்டிருந்தது. எனினும் வெகுநேரமாக வெளியே வராததால் கழிவறையின் கதவை உடைத்து பார்க்கையில் மஞ்சு நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், இதை தொடர்ந்து மஞ்சுவை தூக்கிவந்து துணிகளை போட்டுவிட்டு தண்ணீர் தெளித்தும் எழுந்திருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

நிர்வாணமாக தூக்கில் தொங்கிய பெண்.. ஏற்காட்டில் நடந்தது கொலையா? தற்கொலையா? கொழுந்தனிடம் விசாரணை

இதை தொடர்ந்து விஜய், ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில் விஜய்-யின் சகோதரன் மனைவி தான் மஞ்சு என்பதும் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. விஜய்-யின் அண்ணன், குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அப்போது அண்ணி மஞ்சுவுக்கும் விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி ஏற்காடு வந்து உல்லாசம் அனுபவித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே கொரோனா காரணமாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய சகோதரன், தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். இந்நிலையில் இருவரும் ஏற்காடு வந்த விஜய்க்கு திருமணம் என்ற செய்தி கேட்டதும் மஞ்சு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

நிர்வாணமாக தூக்கில் தொங்கிய பெண்.. ஏற்காட்டில் நடந்தது கொலையா? தற்கொலையா? கொழுந்தனிடம் விசாரணை

எனினும், இதன் காரணமாக மஞ்சு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து விஜயை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like