1. Home
  2. தமிழ்நாடு

1 லட்சம் கோடியை சுருட்டிய பெண் தொழிலதிபர்..!

1

வியட்நாமைச் சேர்ந்தவர் டிருவோங் மை லான். மிகப் பெரிய தொழிலதிபர். வான் தின் பாட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரும் இவரது கூட்டாளிகள் 85 பேரும் சேர்ந்து மிகப் பெரிய பண மோசடியில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். வியட்நாமை இந்த வழக்கு பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் செய்த குற்றத்துக்காக இவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோர்ட்டே கடும் கோபத்துடன் கூறியுள்ளது.

கடந்த பத்து வருடங்களில் சைய்கான் கமர்ஷியல் வங்கியில் இந்த அளவுக்கு பணத்தை சுருட்டியுள்ளது இந்த கும்பல்.  மொத்தம் 85க்கும் மேற்பட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.. அனேகமாக இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படலாம் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் டிருவோங் மை லான் தவிர முன்னாள் இன்னாள் வங்கி அதிகாரிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் என பலரும் சிக்கியுள்ளனர். மிகப் பெரிய அளவில் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு நாட்டையே அதிர வைத்துள்ளார்கள்.

அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், வங்கி விதிகளை மீறியது உள்ளிட்ட புகார்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.  தன் மீதான புகாரை மை லான் மறுத்துள்ளார். தனக்குக் கீழ் உள்ளவர்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இவர்தான் அத்தனை மோசடிகளுக்கும் மூளை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். மை லானுக்கு மரண தண்டனைதான் தர வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர். கோர்ட்டும் கூட மிகக் கடுமையான தண்டனைதான் சரியானது என்று கருத்து தெரிவித்துள்ளது.

மை லான் கைது செய்யப்பட்டு அவரது முறைகேடுகள் வெளியானதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஹனாய் நகரில் போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like