உஷாரய்யா உஷாரு..! முதியோர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்: தற்காத்து கொள்வது எப்படி?

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மோசடியில் ஈடுபடுவோர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் கொள்ளையர்கள் மூத்த குடிமக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து பண திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்றைய இளம் தலைமுறையினரால் வங்கியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வெகு எளிதில் செய்து கொள்ள முடியும். ஆனால் 50 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு பழக்கம் இல்லாதவர்கள் அவர்களால் முழுமையாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் பாதியில் தடுமாறி போய் விடுகின்றனர்.
வங்கியிலிருந்து மேலாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக யாரேனும் பேசினால் தங்களுடைய நலனுக்காக வங்கி மேலாளரே நம்மை தொடர்பு கொள்கிறார்கள் என்று நம்பி அறியாமையில் அவர்கள் கேட்கும் தகவல்களை உடனடியாக கொடுத்து விடுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் ஆன்லைனில் முதியவர்களை குறிவைக்கும் கொள்ளையர்கள் உங்களுடைய வங்கி கணக்கு இன்னும் சில நாட்களில் காலாவதியாகிவிடும், உங்களுடைய வங்கி கணக்கில் எந்த விதமான பண பரிவர்த்தனையும் செய்ய முடியாது என பயமுறுத்தி அவர்களிடம் இருந்து முழு தகவல்களையும் பெற்று விடுகின்றனர்.
இவ்வாறான ஆன்லைன் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையினர் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வழியாக பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் மூத்த குடிமக்கள் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தாததால் அவர்களுக்கு விழிப்புணர்வு சென்று சேர்வது இல்லை. அதிலும் பெண்களுக்கு முற்றிலுமாக சென்று சேர்வதில்லை,
இளைய தலைமுறையினரின் கடமை
"இளைய தலைமுறைகள் தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு ஆன்லைன் குற்ற சம்பவங்கள் மற்றும் ஆன்லைன் மோசடியாளர்கள் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் அது அவர்களது முக்கிய கடமை.
மேலும் நடுத்தர குடும்பத்தினரை குறிவைக்கும் இந்த ஆன்லைன் மோசடி கும்பல்கள் உங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளது, ஆடம்பர கார் பரிசாக கிடைத்துள்ளது, உங்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறோம் என்பது போன்ற ஆசை வார்த்தைகளை காட்டியும் ஏமாற்றி வருகின்றனர்.
புதிய எண்களில் இருந்து இவ்வாறான அழைப்புகள் வந்தாலோ, அல்லது யாரேனும் பயமுறுத்துவது போல் பேசினாலோ உடனடியாக காவல்துறையின் 100 என்ற எண்ணில் அழைத்து அந்த எண் குறித்த தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உஷாரய்யா உஷாரு..! ஆன்லைன்ல வேலை தேடுறீங்களா? இந்த விசயத்துல தெளிவாக இருங்க!
"மோசடி செய்பவர்கள் கவர்ச்சியான வேலை வாய்ப்புகளைக் காட்டி, உங்களோட தனிப்பட்ட தகவல்களை எடுக்க முயற்சி பண்ணுவாங்க.
ஆதார் கார்டு, பான் கார்டு மாதிரியான முக்கியமான டாக்குமெண்ட்ஸை யாரோ தெரியாதவங்ககிட்ட ஷேர் பண்ணாதீங்க.
வேலை தேடும்போது பாதுகாப்பா இருக்க சில முக்கியமான விஷயங்கள் :
ஒவ்வொரு வேலை விளம்பரத்தையும், வேலை வாய்ப்பையும் நல்லா செக் பண்ணுங்க: கம்பெனியோட அபிஷியல் வெப்சைட்ல அந்த வேலை இருக்கான்னு பாருங்க. கம்பெனியோட HRஐ அபிஷியல் வழிகள்ல தொடர்பு கொண்டு பேசுங்க.
நம்பகமான தளங்கள் மூலமா மட்டும் அப்ளை பண்ணுங்க: LinkedIn, Naukri இல்லன்னா கவர்மெண்ட் அப்ரூவ் பண்ணின ஜாப் போர்டல்ஸ் மாதிரியான நம்பகமான வெப்சைட்ஸை யூஸ் பண்ணுங்க.
நம்ப முடியாத வாக்குறுதிகளை நம்பாதீங்க: வழக்கத்துக்கு அதிகமா சம்பளம் தர்றாங்கன்னாலோ இல்லன்னா வேலை என்னன்னு தெளிவா சொல்லாம ரொம்பவும் பொதுவா இருக்குன்னாலோ கொஞ்சம் உஷாரா இருங்க.
உண்மையான வேலை விளம்பரத்துல உங்க வேலை என்ன, யாருக்கு ரிப்போர்ட் பண்ணனும், உங்க பதவி என்னன்னு தெளிவா இருக்கும்.
உண்மையான வேலைன்னா இன்டர்வியூக்குன்னு சில முறைகள் இருக்கும். யார் இன்டர்வியூ எடுக்குறாங்கன்னு அவங்க பேர் சொல்லுவாங்க.
நிறைய கம்பெனிங்க இப்ப ஹைப்ரிட் இல்லன்னா ஆபீஸ்ல வந்து வேலை செய்ற முறையைத்தான் விரும்புறாங்க. நிறைய ரிமோட் வேலை வாய்ப்புகள் ஒரேடியா வந்தா கொஞ்சம் யோசிங்க.பயிற்சி, ரெஜிஸ்ட்ரேஷன் இல்லன்னா உபகரணங்கள் வாங்குறதுன்னு பணம் கேட்டா அது கண்டிப்பா மோசடியாத்தான் இருக்கும்.
அடுத்த வேலை உங்களுக்காக ஒரு கிளிக்கில் காத்திருந்தாலும், பக்கத்துலயே ஒரு மோசடியும் இருக்கலாம்னு ஞாபகம் வெச்சுக்கோங்க.