உஷாரய்யா உஷாரு..! சைபர் கிரைம் பெயரில் போலி சமூக வலைதளம்..!

சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக காவல் துறையின், 'சைபர் கிரைம்' பிரிவு, பொது மக்களுக்கு, 'டிஜிட்டல்' பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இப்பிரிவின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி, சில நேர்மையற்ற நபர்கள், போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான கணக்குகள், பொது மக்களிடையே குழப்பத்தை உருவாக்குவது மட்டுமின்றி, நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. இது, பொதுமக்களை தவறாக நடத்தவும் வாய்ப்புள்ளது. மேலும், டிஜிட்டல் பாதுகாப்புக்கான அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
தற்போது, 10 போலி இன்ஸ்டாகிராம், 4 'எக்ஸ்' தள கணக்குகள் கண்டறியப்பட்டு, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக, '@tncybercrimeoff' மட்டுமே உள்ளது. மற்ற கணக்குகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.