பிறந்து சில மணி நேரத்திலேயே , ஆண் குழந்தை சாலையோர புதரில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் !! குழந்தை கவலைக்கிடம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட், இராஜேஷ்வரி லே அவுட் பகுதியில் சாலையோரமாக உள்ள புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது, அப்பகுதியினர் சென்று பார்த்ததில் பச்சிளம் ஆண் குழந்தை இருந்தையறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, பச்சிளம் குழந்தை தற்போது ஓசூர் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பிறந்து சில மணிநேரங்கள் மட்டுமேயான குழந்தைக்கு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பச்சிளம் ஆண் குழந்தைக்கு மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கீறல் ஏற்ப்பட்டு ,
மூக்கில் தொடர்ந்து இரத்தபோக்கு இருந்து வருவதால் கவலைக்கிடமான நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஓசூர் சிப்காட் போலிஸார், குழந்தையை புதரில் வீசி சென்றவர்கள் யார் ? என்கிற விசாரணையை மேற்க் கொண்டு வருகின்றனர்.
Newstm.in