1. Home
  2. தமிழ்நாடு

மதுபிரியர்கள் ஷாக்...! நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது..!

1

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை இதை கவனிக்கிறது. டாஸ்மாக் மூலம் தமிழகம் முழுவதும் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் நிறைய கடைகள் மற்றும் பார்கள் உள்ளன.

டாஸ்மாக் ஒரு நாளைக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. விடுமுறை நாட்களில் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற நாட்களில் அதிக விற்பனை நடக்கும். பொங்கல், தீபாவளி நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெறும்.

வருடத்தில் பத்து நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். திருவள்ளுவர் தினம் (ஜனவரி 15), குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), வள்ளலார் தினம், சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய நாட்களில் டாஸ்மாக் மூடப்படும். தேர்தல் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடலாம். இதை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள். மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


இந்த உத்தரவால் மதுப்பிரியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like