1. Home
  2. தமிழ்நாடு

மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..! மதுபானங்கள் விலை திடீர் உயர்வு..!

1

நாடு முழுவதும் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் உள்நாட்டு மதுபானங்கள், பீர், ஆங்கில மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளன.ஜனவரி 29 அன்று புதிய காலால் கொள்கை அதிகரிக்கப்பட்டது.இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்ததால் மதுபான உரிமை கட்டணம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் மதுபானங்களுக்கான புதிய விலையை அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து மதுபான ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் நாட்டு மதுபானம் 5 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன் விலை ரூ.65க்கு பதிலாக ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. ஆங்கில மதுபானத்தின் குவார்டர் விலை 15 முதல் 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அரை மற்றும் முழு பாட்டில்களின் விலையும் உயர்ந்துள்ளது. பீர் கேன் விலை 10 ரூபாய் அதிகரித்துள்ளது. பாட்டில் விலை ரூ. 20 அதிகரித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்திலும் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. பாட்டில், கேன் ஆகியவற்றின் விலை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. 

Trending News

Latest News

You May Like