1. Home
  2. தமிழ்நாடு

இனி வருஷத்துக்கு 12, 000 வழங்கப்படுமா?? மத்திய அரசு விளக்கம்!!!

1

மத்திய அரசு PM கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் வீதம் மூன்று தவணையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக PM கிசான் திட்டத்தின் உதவித்தொகை உயர்த்தப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டே உள்ளது. இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது கடந்த 19 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் PM கிஷான் திட்டத்தின் கீழ் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்து  வருகின்றனர். அதன்படி இதுவரை 2.81 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் உதவித்தொகை உயர்த்தப்படுவது குறித்து இன்னும் மத்திய அரசு எந்த ஒரு ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. மேலும் இது தொடர்பான எந்த திட்டமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like