1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட நடக்குமா ? சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கத்திற்கு காரணம் ஜீன்ஸ் பேண்ட்..!

1


5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மாக்னஸ் கார்ல்சென், உலக ரேபிட் அன்ட் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சதுரங்க விளையாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி மாக்னஸ் கார்ல்செனுக்கு 200 டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.17,076) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த கார்ல்சென்னிடம், ஆடையை மாற்றும்படி கூறியதற்கு அவர் மறுத்து விட்டதால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சதுரங்கம் முதலீடு செஸ்

உலக ரேபிட் அண்ட் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 8வது சுற்று ஆட்டத்தின் போது இந்த சம்பவம் நடைபெற்றது. ஃபிடே அமைப்பு இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆடைக் கட்டுப்பாடு ஃபிடே குழுவினரான தொழில்முறை வீரர்கள், அனுபவம் வாய்ந்தவர்களால் தீர்மானிக்கப்பட்டது. இந்த விதிமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றன. எல்லா போட்டிகளுக்கு முன்பாகவும் இது குறித்து போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

வீரர்களின் தங்கும் இடம் போட்டி நடைபெறும் இடத்துக்கு நடந்துசெல்லும் தூரத்திலே இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைப்பிடிக்க ஏதுவாக இருக்க இந்த மாதிரியான அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

கார்ல்சன்

இன்று மாக்ன்ஸ் கார்ல்சென் தடைசெய்யப்பட்ட ஜீன்ஸ் அணிந்து வந்து விதிமுறைகளை மீறினார். அவரது உடையை மாற்றும்படி கூறியும் அவர் அதனை ஏற்கவில்லை என்பதால் 9வது சுற்றில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இது அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும். இதில் எந்தவிதமான பாகுபாடும் இல்லை.

செஸ் விளையாட்டையும் அதன் மதிப்பினையும் மேம்படுத்த ஃபிடே முயற்சித்து வருகிறது. விதிமுறைகளை அனைவரும் மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like