இப்படி கூட நடக்குமா ? AIR COOLER-ஆல் நின்றுபோன திருமணம்!
உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் ஒரு திருமணம் நிறுத்தப்பட்டது, காரணம் என்ன தெரியுமா ஒரு ஏர் கூலர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் AIR COOLER-ன் அருகில் யார் உட்காருவது என மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டனர் . கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு “இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும்" எனக்கூறி மணப்பெண் பிடிவாதம் பிடித்துள்ளார்.
பின்னர் போலீசார் தலையிட்டும் முடிவு எட்டப்படாததால், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 126 (தவறான கட்டுப்பாடு) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் மணமகன் ஹுக்கும் சந்த் ஜெய்ஸ்வால், அவரது உறவினர் பங்கஜ், மணமகளின் தந்தை நந்த் ஜி குப்தா மற்றும் அவரது சகோதரர் ராஜேஷ் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
.png)