தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? மேலும் தளர்வா? 29ஆம் தேதி முதல்வர் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ குழுவினருடன் வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவல் குறித்து தமிழகத்தில் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது வழக்கம். ஆட்சியர்கள் மற்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தல் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது.
பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, இ-பாஸ் ரத்து ஆகிய நடவடிக்கைகள் அதன் அடிப்படையில் தான் எடுக்கப்பட்டது. தற்போதும் பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் தான் உள்ளது. பொதுமுடக்கம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பொது முடக்க தளர்வுகளை மேலும் அதிகரிப்பது அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
newstm.in