1. Home
  2. தமிழ்நாடு

பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகுமா..? வெளியான முக்கிய தகவல்..!

1

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22 -ம் தேதி முடிவடைந்தது.  இதனைத்தொடர்ந்து மார்ச் 4 -ம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு  25 -ம் தேதி முடிவடைந்தது.  அதேபோல 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கடந்த மார்.26 தொடங்கி ஏப். 8 -ம் தேதி நிறைவடைந்தது.


இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி,மே.6 மற்றும் மே. 10 -ம் தேதிகளில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like